×

ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திராவரம் பிரஜாகலத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். ஆந்திரா வளர்ச்சி அடைய வேண்டுமானால் இரட்டை இயந்திர ஆட்சி அமைய வேண்டும். ஆந்திராவில் பூஜ்ஜிய வளர்ச்சி, 100 சதவீதம் ஊழல். மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை இயந்திர ஆட்சி அமைந்தால், முடங்கிக் கிடக்கும் பணிகள் அனைத்தும் முடிவடையும். ஜெகன் ஆட்சியில் அரசு ஜெட் வேகத்தில் ஊழலை செய்தது. இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்.

மாநிலத்தை கடனில் தள்ளிவிட்டது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு. இரட்டை இயந்திர ஆட்சி அமைந்தால்தான் மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியம். ஈ.டி., ஈ.டி என இந்தியா கூட்டணி காங்கிரஸ் தலைவர்கள் சத்தம் போடுகிறார்கள். அவர்கள் பணத்தைக் குவித்து வைத்துள்ளார்கள். அந்த கட்சி தலைவர்களின் பணத்தை இயந்திரங்களால் கூட எண்ண முடியவில்லை. ஆந்திராவில் மோடியின் உத்தரவாதமும், சந்திரபாபுவின் தலைமையும், பவன் நம்பிக்கையும் உள்ளது. கூட்டணி அனைத்து வேட்பாளர்களையும், பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில பாஜ தலைவர் புரந்தேஸ்வரி, தெலுங்கு தேசம் பொதுச்செயலாளர் நாரா ேலாகேஷ், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டனர். பிறகு அனக்காபள்ளியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

The post ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Jagan Mohan ,YSR Party ,PM ,Modi ,Tirumala ,Andhra Pradesh ,Telugu Desam ,BJP ,Janasena ,Rajamahendravaram Prajagalam ,East Godavari district ,National Democratic ,
× RELATED உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை...